Friday, May 2, 2014

வெகுளி



மாமியாரிடம் கோபித்துக்கொண்டு அடிக்கடி பிறந்த வீட்டுக்கு வருவது சரோஜாவுக்கு வாடிக்கையாகவே ஆகிவிட்டது.

இரண்டு நாட்கள் அம்மா வீட்டில் தங்கிவிட்டு பின்பு இங்கும் இருக்க பிடிக்காமல் அம்மாவிடம் ஏதாவது வம்பிழுத்துவிட்டு புருஷன் வீட்டுக்கு ஓடுவாள்.

ஒரே வாரத்தில் மீண்டும் ஒரு சண்டை போட்டுக்கொண்டு திரும்பி வருவாள். இதையெல்லாம் பார்த்து பார்த்து அவள் பிறந்த வீட்டினருக்கே அலுத்துவிட்டது.

அன்றும் அப்படித்தான், கோபமும் அழுகையுமாக பிறந்த வீட்டுக்கு வந்தாள் சரோஜா. அவள் அப்பா சுவாமிநாதன் என்ன சண்டை என்றுகூட கேட்கவில்லை. தன் அறையிலேயே முடங்கிக்கிடந்தார்.

"என்னங்க,,,நம்ம பொண்ணு எதுக்கு கோவிச்சுட்டு வந்திருக்கான்னு கேக்கலையா..?" சுவாமிநாதனுக்கு காபி ஆற்றி தந்தபடியே கேட்டாள் அவரது மனைவி சுசீலா.

" பொல்லாத கோவம், மாமியார்கிட்ட சண்டை போட்டுட்டு வந்திருப்பா, ரெண்டு நாள் கழிச்சு தானா போயிடுவா, இவ கதைய நான் எதுக்குடி கேக்கணும் ..?"

" நீங்க நினைக்கிறமாதிரி இந்த தடவ அவ மாமியார்கிட்ட சண்டை போட்டு கோவிச்சுட்டு வரல, மாமியார் சண்டை போடாம உம்முன்னு இருக்காங்களாம், அதனால போர் அடிக்குதுன்னு வந்திருக்கிறா..!"

" அழுவதா சிரிப்பதா என தெரியாமல் விக்கித்து நின்றார் சுவாமிநாதன்


kunkumam 31-01-14

No comments: