Friday, May 2, 2014

அவள்

ராஜேஷ்சுக்கு திருமணம் முடிந்து ஒரு வாரம் கழிந்த பிறகே அலுவலகம் திரும்பினான். அவனது மனைவி சஞ்சனா காலைச்சுற்றிய பாம்பைப்போல் அவனையே சுற்றிக்கிடந்தாள்.

அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய ராஜேஷ்சை எதிர்கொண்டு ஹாலில்வைத்தே அவனை இறுக அணைத்தாள்.

ராஜேஷ் சங்கடத்தில் நெளிந்தான். காரணம் டிவி பார்த்துக்கொண்டிருந்த அவனது தங்கை ரமா அதைப்பார்த்துவிட்டாள். அணைப்பிலிருந்த சஞ்சனாவை விடுவித்துவிட்டு எதுவும் நடக்காததுபோல் அறைக்குள் நுழைந்தான்.

காலையில் டைனிங்ஹாலில் ரமா இருக்கும்போது தன்னை விழுந்து விழுந்து கவனித்ததையும் உடம்பை உரசுவதுபோல் நின்றுவிட்டு பரிமாறுவதுமாக இருந்தது அவனுக்கு நினைவு வந்தது.

" நீ ரமா முன்னால அப்படி பண்ணியிருக்க்க்கூடாது, அவ பார்த்துட்டா, எனக்கு ஒரு மாதிரியாயிடிச்சி, அவ முன்னால இப்பிடி நெருக்கமா இருக்கவேன்டாம், புரிஞ்சுதா...!" ராஜேஷ் அவளுக்கு புரியும்படியாகச்சொன்னான்.

" ஏங்க..நான் ரமா பார்க்கணுமுன்னுதான் அப்பிடி நடந்துகிட்டேன். நாம ரெண்டு பேரும் எவ்வளவு சந்தோஷமா இருக்கோம்ங்கிறத அவ தெரிஞ்சிக்கணும், புருஷன் பொஞ்சாதி உறவுங்கறது பாசத்தில பின்னப்பட்ட உற்வுங்கறத அவ புரிஞ்சிக்கணும், கணவன் மனைவிக்குள்ள சின்ன சண்டை வந்ததுக்கு வீட்டவிட்டு கோவிச்சுட்டு நம்ம வீட்டுக்கு வ்ந்திருக்குற ரமா நாம ஒட்டுறதும் உரசுறதுமா இருக்கிறத பார்க்கிறப்போ அவ புருஷன் ஞாபகம் வந்து அவ வீட்டுக்கு போயிடணுமுன்னுதான் அப்பிடி நடந்துகிட்டேன்."

அவளது பதிலைக்கேட்டு ச்ந்தோஷத்தோடே அவளை அணைக்க வந்தவனை "சீ போங்க" என்று தள்ளிவிட்டாள் சஞ்சனா.

 (குமுதம் 29-01-14 இதழில் வெளிவந்தது

No comments: