Thursday, November 12, 2009

சோதனை

அனிதாவை பெண் பார்த்துவிட்டு ” பொண்ணு பிடிச்சிருக்கு!” என்று சொல்லிவிட்டு ஒரு கவர் ஒன்றை எடுத்து அவளிடம் நீட்டினான் சரவணன்.

“ என்ன, லவ்லெட்டரா?” அனிதா புன்னகைத்தபடியே கேட்டாள்.

“ இது லவ்லெட்டர் இல்ல, என்னோட பாடி செக்கப் ரிபோர்ட், நான் ஆண்மையுள்ளவன்னும், எனக்கு எயிட்ஸ் நோய் இல்லையிங்கறதுக்குமான ரிப்போர்ட், உங்களுக்கு என்ன பிடிச்சிருந்தா மேற்கொண்டு கல்யாணநாள் நிச்சயம் பண்ணலாம்!” சரவணன் சொன்னபோது அவனை ஆச்சரியமாக பார்த்தாள் அனிதா.

“ ரெண்டு நாள் டைம் குடுங்க!” அனிதா சொன்னபோது அவளது தந்தையின் முகத்தில் கோபம் வந்தேறியது.

“ மாப்பிள்ளைதான் ரிப்போர்ட் குடுத்துட்டாரே, அப்பறம் எதுக்கு ரெண்டு நாள் டைம் வேணும்!” சற்று அதட்டலாகவே கேட்டார் அனிதாவின் தந்தை.

“ அப்பா, மாப்பிள்ளையே முன்வந்து தன்னோட உடல செக்கப்பண்ணி ரிப்போர்ட் தர்றப்போ, அவர்கூட வாழப்போற நான் குழந்தை பெத்துக்க தகுதியானவளான்னு செக்கப் பண்ணி பார்த்துட்டு அப்பறம் சொல்றேனே, செக்கப்ங்கறது ஆணுக்கு மட்டும் பண்ணுனா போதாது!” அனிதாவின் வார்த்தையில் உண்மை இருப்பதை உணர்ந்தார் அனிதாவின் தந்தை.

No comments: