Thursday, February 19, 2009

அடடே

வங்கியிலிருந்து பணம் எடுத்துவிட்டு தனது புதிய ஹைனைடிக் ஹோண்டா டூ-வீலரில் ஏறிப்பறந்தாள் மதிவதனி. மெயின்ரோட்டைக் கடந்து வலப்பக்கமாக திரும்பி, ஆள் நடமாட்டமில்லாத அந்த சந்துக்குள் நுழைந்து, வண்டியின் வேகத்தை குறைத்து கண்ணாடியைப் பார்த்தபோது திடுக்கிட்டாள்.

பின்னால் ஹீரோ ஹோண்டா வண்டியில் அவளை பிந்தொடர்ந்தான் அவன். தடித்த உருவம், கண்களில் கறுப்பு கண்ணாடி ஒரு சினிமா வில்லனைப்போல் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தான்.

’பேங்குலயிருந்து பணத்த எடுத்துட்டு திரும்பறத பார்த்திருப்பான் அதான் என்ன பாலோ பண்றான், கடவுளே இந்த சந்துல வேற ஆளே இல்லியே!’ மதிவதனிக்கு பதட்டம் தொற்றிக்கொண்டது. அவனை திரும்பி பார்த்தபடி வண்டியின் வேகத்தை கூட்டினாள்.

சிறிது தூரம் சென்றதும் ஆள்நடமாட்டம் தெரிய நிம்மதி பெருமூச்சு விட்டவாறு பணமிருக்கும் தனது கைப்பையை இறுக்கமாகப் பற்றினாள். சட்டென்று அவள் முன்னால் வண்டியை நிறுத்தினான் அவன்.

அய்யோ என்று கத்தி ஆளைக்கூட்டவேண்டும் நினைத்து வாயை திறக்கவும்,

’’ மேடம், உங்க வண்டியோட சைடு ஸ்டேண்டு மடக்காமலேயே இருக்கு, இப்பிடி போயி இடது பக்கமா திரும்பினா சைடு ஸ்டேண்டு தரையுல உரசி கீழ விழுந்துடுவீங்க, முதல்ல ஸ்டேண்ட மடக்கி வையுங்க!’’ சொல்லிவிட்டு வேகமாய் பறந்த அவனை ஆச்சரியமாகப்பார்த்தாள் மதிவதனி.

No comments: