Thursday, February 5, 2009

குமரிப்பெண்

ரம்யாவின் திருமணத்துக்கு முந்தின நாள் இன்னொரு தோழி சொன்ன தகவலைக்கேட்டு திருமணத்துக்கு போக வேண்டாமென முடிவெடுத்தாள் மேகலா.

”ஏன் போகலை!” அவளது அப்பா கேட்டார்.

” ரம்யாவை கல்யாணம் பண்ணிக்கப்போற மாப்பிள்ளை, மொதல்ல நம்ம வீட்டுக்கு வந்து என்னத்தான் பொண்ணு பார்த்துகிட்டு போனார். நகை ரொக்கம் ரொம்ப கொறச்சலா இருக்குன்னு அவங்க வீட்டுல வேண்டாமுன்னு சொல்லீட்டாங்க, ரெண்டு நாள் கழிச்சு மாப்பிள்ளை என்ன சந்திச்சு பெத்தவங்க பேச்ச மீற முடியல, என்ன மன்னிச்சிடுங்கன்னு சொல்லிட்டுப் போனார். நாளைக்கு ரம்யா கல்யாணத்துக்குப் போயி வாழ்த்துறப்போ மாப்பிள்ளை என்னைப் பார்த்துட்டாருன்னா ஒரு குற்ற உணர்வு வரலாம். சந்தோஷமா
இருக்கவேண்டிய நேரத்துல எதுக்கு சங்கடம்..!” என்ற பதிலில் சிலிர்த்தார் அவளது அப்பா.

குங்குமம் வார இதழில் வெளிவந்தது

No comments: