Friday, May 2, 2014

பெயர்கள் (குமுதம்)
09-04-14

“ அம்மா, அப்பா கதை எழுதுறப்போ கதாபாத்திரங்கள் பெயர்கள் எல்லாம் பழைய காலத்து பெயராவே இருக்கு, மாடர்னா பேரு வைக்கவே மாட்டேங்கிறாரு,!” நக்கலாய் சொன்னாள் நந்தினி.

“நானும் பலவாட்டி சொல்லியிருக்கேன், ஸ்டையிலா பெயர் வையுங்கன்னா கேட்கவே மாட்டேங்கறாரு, அவருக்கு பிடிச்சதெல்லாம், காமாட்சி, விசாலாட்சி, பங்கஜம், ஆம்பளப் பேருன்னா நேசையன், பொன்னுமணி, மாணிக்கம்..!” மகளோடு சேர்ந்து வாசுகியும் கிண்டல் செய்ய துவங்கினாள்.

~ஏம்பா..இப்பிடி பெயர்கள் செலக்ட் பண்றீங்க..?” வெடுக்காய் கேட்டாள் நந்தினி.

“மாடர்ன் பேரு எனக்கு தெரியாம இல்ல, நான் பேரு தேர்வு செய்யிறதெல்லாம் எங்க கிராமத்து உறவுக்காரங்க பேர்கள் தான். ஒருவேள என்னோட கதைகள் தேர்வாகி அது வெளிவந்து உறவுக்காரங்க யாராவது அத வாங்கி படிக்குறப்போ, இவன் இன்னமும் நம்மள மறக்கலன்னு நினைப்பாங்க இல்லையா.. அதுக்காகத்தான் அந்த மாதிரி பேர்கள் பயன்படுத்துறேன்..”

அவர்களது உணர்வுகளை புரிந்துகொண்டவளாய் “இனிமே அப்பிடியே பெயர்கள் செலக்ட் பண்ணுங்கப்பா…” நந்தினி சொல்ல அவளோடு சேர்ந்து தலையாட்டினாள் வாசுகி,

No comments: