அந்த பிரபல பள்ளிக்கூடத்தில் அடுத்த வருடத்திற்கான
சேர்க்கைக்கு இப்பொழுதே தேர்வு நடத்திக்கொண்டிருந்தார்கள். வீட்டு வேலை செய்யும்
சரோஜாவும் தனது மகன் ராஜேஷ்சை அழைத்து வந்திருந்தாள். எல்.கே.ஜி தவிர்த்து பத்தாம்
வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது.
வீட்டு வேலை செய்யும் சரோஜாவும் தனது மகன்
ராஜேஷை அழைத்து வந்திருந்தாள். அவளுக்கு முன்பாகவே வரிசையில் தனது குழந்தையோடு
நின்றிருந்தாள் ராகினி, தனது வீட்டில் வேலை செய்யும் சரோஜா அங்கு வந்திருப்பதை ஏளனமாகப்
பார்த்தாள்.
எழுத்து தேர்வு முடிந்து பேப்பர்
திருத்தப்பட்டு மார்க்கும் கொடுக்கப்பட்டிருந்தது. ராகினியின் மகன் தொண்ணூற்றி
எட்டு மதிப்பெண்ணும் சரோஜாவின் மகன் முப்பத்தி இரண்டு மதிப்பெண்ணும்
வாங்கியிருந்தார்கள்.
``இந்த ஸ்கூல்ல சேரணுமுன்னா என் மகன மாதிரி நல்ல
மார்க் வாங்கணும்!’’ நக்கலாகவே சொன்னாள் ராகினி. சரோஜா அவமானத்தால் நெளிந்தாள். பிரின்சிபால்
அதிக மதிப்பெண் வாங்கியவர்களின் பெயர்களை வாசித்தபோது ராகினிக்கு பெருமை தட்டியது.
``இப்ப பேர் படிச்ச குழந்தைங்க கற்பூர புத்தி
உள்ளவங்க இவங்க எந்த ஸ்கூல்ல படிச்சாலும் நல்லாத்தான் படிப்பாங்க, ஆனா இந்த
ஸ்கூல்ல இப்பிடிப்பட்ட குழந்தைங்களுக்கு அட்மிஷன் கிடையாது, படிப்புல ஆர்வம்
இல்லாத கற்றலில் குறைபாடு இருக்கிற குழந்தைங்களுக்கு படிப்பு சொல்லிதந்து அவங்கள
புத்திசாலி ஆக்குறதே எங்களோட நோக்கமே!’’
சரோஜாவின் முகத்தில் சட்டென்று சந்தோஷம் வந்தமர
ராகினியின் கர்வம் மெல்ல மெல்ல கரையத்தொடங்கியது.
குமுதம் 26-12-12
No comments:
Post a Comment