Friday, September 28, 2012

மனசு-ஒரு பக்கக் கதை


கிராமத்தில் தன்னோடு ஹோட்டல் வேலையில் உதவியாக இருந்த மகன் கைலாஷ் சென்னை சென்று தனியாக ஹோட்டல் தொழில் நடத்துகிறான் என அறிந்தபோது அவன் எப்படி ஹோட்டலை நடத்துகிறான் என்று பார்த்து வர புறப்பட்டார் பவுலையா.

அன்று முழுவதும் என்னென்ன நடக்கிறது என்று உன்னிப்பாக கவனித்த்தார். இரவு பதினொன்று மணிக்கு கைலாஷ்சை அழைத்து சில மாற்றங்கள் செய்யச்சொன்னார்.

``இந்தாப்பா, உன் ஹோட்டல்ல முதல்ல டோக்கன் சிஸ்டம் போடணும், அப்பறம் மதிய உணவு நாற்பத்தி எட்டு ரூபாய் இத ஐம்பது ரூபான்னு மாத்தியிடணும் இல்லேண்ணா சில்லரை தட்டுப்பாடு இருக்குற இந்த காலத்துல் ரெண்டு ரூபா சில்லரை குடுக்கிறது உனக்கு கஷ்டமா இருக்கும்.  நான் சொல்றது சரிதானே..”” பவுலையா அவன் முகம் பார்த்து கம்பீரமாகச் சொன்னார்.

``அப்பா, நம்ம கடை முன்னால சில பிச்சைக்காரங்க சாப்பிட்டு வர்றவங்ககிட்ட கை நீட்டுவாங்க, அவங்க கையில் மிச்சமிருக்கிற ஒரு ரூபாயோ இல்ல ரெண்டு ரூபாயோ அவங்களுக்கு குடுத்திடுவாங்க், நாம முன்னாடியே டோக்கன் வாங்கிகிட்டு சாப்பாடு போட்டா சிலவேள அவங்களுக்கு சில்லரை காசு போட மனசு வராம போயிடும். அதனாலதாம்பா டோக்கன் சிஸ்டம் போடல, ரேட்டயும் ரெண்டு ரூபா ஏத்தல..சொல்லிவிட்டு அமைதியாக இருந்த தனது மகனிம் நல்ல மனசை ஒரு கணம் பார்த்து அசந்தார் பவுலையா.

குங்குமம்-03-09-12

No comments: