Thursday, February 10, 2011

மிச்சம்

தனது வயலில் விளைந்து நிற்க்கும் நெல்கதிர்களை பறவைகள் வந்து கொத்தி தின்னாமலிருக்க காவல் பொம்மை ஒன்றை தயாரிக்கத் தொடங்கினார் விவசாயி சாமிநாதன்.

மண்சட்டியில் கருப்பு மைகொண்டு கண்,வாய், காது வரைந்து குச்சியில் ஒரு மனித உருவ அளவிற்கு வைக்கோல் சுற்றி அதற்க்கு பழைய சட்டை அணிவிக்க தனது பழைய உடைகளை துளாவினார் சாமிநாதன்.

எல்லா சட்டைகளும் நன்றாக இருக்கவே வேறு வழியின்றி நல்ல சட்டை ஒன்றை எடுத்துக கொண்டு புறப்படும்போது அவரது ஏழு வயது பேத்தி மதிவதனியும் அவர் கூடவே நடந்தாள்.

`` எதுக்கு தாத்தா இந்த பொம்மை செய்யறீங்க?’’ மெல்லக்கேட்டள் மதிவதனி

``வயக்காட்டுல நெல் விளைஞ்சு நிக்குது, இந்த பொம்மைய கொண்டு போய் நிக்க வெச்சா மனுஷன் நிக்குதுன்னு பயந்து பறவைக வயக்காட்டு பக்கம் வரவே வராது.’’ பொம்மைக்கு சட்டை அணிவித்தபடியே சொன்னார் சாமிநாதன்.

``தாத்தா, பறவைக வந்து நெல்கொத்திபோனா வயல்ல எவ்வளவு நெல் குறையும், ஒரு கிலோ குறையுமா? ஒரு கிலோ நெல்லோட வில பதினைஞ்சு ரூபா, இந்த பதினைஞ்சு ரூபாய்க்காக முன்னூறு ருபா சட்டை, இருபது ரூபா மண்சட்டி, அம்பது ரூபா வைக்கோல். எதுக்குத்தாத்தா இத்தனை செலவு, பறவைக கொத்திப்போன மிச்சம் நெல்லு நம்க்கு போதும்பா, அதுகள வீணா காவல் பொம்மைகள வெச்சு விரட்டாதீங்க!’’ உருக்கமாய்ச்சொன்ன பேத்தியின் வார்த்தைகள் மனதை தைக்க காவல் பொம்மையை பிரிக்க ஆரம்பித்தார் சாமிநாதன்.

1 comment:

சுந்தரா said...

அருமையான கதை.