Friday, May 1, 2009

இடைஞ்சல்

கண்ணில் படும் நாய்களை
அடித்து துரத்தினாள்
அந்த மூதாட்டி!

நன்றியுள்ள நாயிடம்
ஏன் இந்த வெறுப்பென்று
என் பார்வை வழி மறித்தது!

எச்சில் இலை உணவு தேடுகையில்.
இடைஞ்சலாக இருப்பதே
இந்த நாய்கள் தானாம்!

கண்ணீரை ஒற்றியெடுக்க
விரல்கள் அனுப்புகிறேன்
திரும்பி வந்த விரல்களில்
உலராத குருதியின் ஈரம்
அந்த மூதாட்டியைப் பார்த்து!

No comments: