Tuesday, March 24, 2009

ஹலோ மிஸ்டர்

கம்பெனியில் ஆள்குறைப்பு பண்ணப்போகிறார்கள் என்ற செய்தியை தீபக் தன்னுடன் வேலை பார்க்கும் அன்புவிடம் சொன்னபோது அதை நம்பாமல் உனக்கெப்பிடி தெரியும் இந்த விஷயம் என்று எதிர் கேள்வி கேட்டான் அன்பு.

``எம்.டி, பி.ஏ கிட்ட சொன்ன விஷயம் நம்ம ஆபீஸ் பாய் காதுல விழுந்துதாம் அவன்தான் சொன்னான்!’’ என்றபடி முழு ஈடுபாட்டுடன் வேலையை கவனிக்க ஆரம்பித்தான் தீபக்.

தங்களது வேலை பறிபோகுமோ என்ற பயத்தில் யாரும் அரட்டை அடிக்காமல் வேலையில் கவனமாக இருந்தார்கள்.

``இப்போ எல்லாரும் எப்பிடி வேல செய்யிறாங்க?’’ ஆபீஸ்பாயிடம் எம்.டி மெல்ல கேட்டார்.

`` எல்லாரும் இப்போ ரொம்ப சின்சியரா வேல பார்க்குறாங்க சார்!'' அடக்கமாக சொன்னான் ஆபீஸ்பாய்.

தனது அலுவலகத்தில்வேலை செய்யாமல் அரட்டை அடித்து பொழுது போக்கிக்கொண்டிருந்தவர்களிடம் ஆட்குறைப்பு என்ற வதந்தியை ஆபீஸ்பாய் மூலம் பரப்பியது நல்லதாப் போச்சு என்று சந்தோஷப்பட்டார் எம்.டி.

No comments: