Friday, January 30, 2009

கே.வைதேகி பாலாஜியின் கவிதைகள்

உணர்வின் உளறல்கள்…………….

உன் கை விரலோ கால் விரலோ
கதவிடுக்கில் இடித்துக் கொள்ளவோ
நசுங்கி கொள்ளவோ
ஆசைப்படுகிறேன்
உன் பாசப் பரிதவிப்பை ரசிப்பதர்க்கு!

தலைவலி எனக்கு சுகமானது
உன் விரல் வைத்தியத்திற்க்கு!

காய்ச்சல் எனக்கு கற்கண்டானது
நீ ஊட்டும் சோற்றை சாப்பிடுவதற்க்கு!

நான் அழகி இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்
உன் உதடு உதிர்க்கும் உளறல் பிரியத்திற்க்கு!

வெற்றியை விட தோல்வி சுகமானது
உன் தோள்மீது சாய்ந்து கொள்வதற்க்கு!

வெடித்த கடுகு கண்ணிலும்
காய்ந்த எண்ணை காலிலும்
கொட்டவேண்டுமென காத்திருக்கின்றேன்
உன் கடைக்கண் சிந்தும் துளியை காண்பதற்க்கு!

சண்டை இட தவமிருக்கிறேன்
உன் சமாதானக் கவிதையை கேட்பதற்கு!

பிரிவு எனக்குப் பிடித்தமானது
உன் காதலை உணர்வதற்க்கு!

எதையும் இழப்பதற்க்கு தயாராய் இருக்கிறேன்
உன்னுடன் இருப்பதற்க்கு.

- வைதேகி பாலாஜி

No comments: