பொங்கல் திருவிழா
–அது
தமிழர் திருவிழா
பாரம்பரியத்தில்
நிழலாடும்
பண்பாட்டு திருவிழா
இந்த விழாவில்
உலை அரிசி பொங்கும்
மகிழ்ச்சி
மனங்களில் தங்கும்
இன்று எந்த தமிழனுக்கு
மகிழ்ச்சி தங்கியிருக்கிறது
எந்த தமிழன் உலையில்
மகிழ்ச்சி பொங்கல்
பொங்கியிருக்கிறது
அணைக்கட்டுகளின்
கதவுகள்
அடைந்தே கிடப்பதால்
கண்ணீர் வடிக்க
மட்டுமே முடிகிறது
காவிரியால்!
காவிரியின் வரத்தின்றி
காய்ந்து கிடக்கின்றன
பயிர்கள்
கண்ணீர் வடித்தபடி
பயிர்கள் உயிர்
விடுவதை
பார்த்து பார்த்து
கண்ணீர் வடித்து
உயிர் விட நினைக்கிறான்
தமிழன்.
விதை நெல்லு வட்டிக்கு வாங்கி
விதைச்சது முளைச்சப்போ
வீழ்ந்து கிடக்குது
பயிரு
நிமிர முடியாம
குறுவை சாகுபடியில்
குடி உயரும் என்று
நினைத்தவனுக்கு
தலைகுனிவே தஞ்சமாகிப்போனது
சம்பா சாகுபடியில்
சரிந்து போன பயிர்களைப்போல
தமிழனும்
சரிந்து போனான்
காவிரி வராதவரை
தமிழன் பொங்கினாலும்
–அது
இனிப்பு பொங்கலல்ல
கண்ணீர் பொங்கல்
No comments:
Post a Comment