
கருணையுள்ள நாயகன்
நேதாஜி நற்பணிமன்ற ஆண்டுவிழா கூட்டத்தில் வாழ்த்தி பேசிவிட்டு வெளியேறுமுன் ஏழை எளிய மக்களுக்கு திரு வே. தேவராஜ் தேவா செக்யூரிட்டி பீரோ உரிமையாளர் அவர்கள் தையல் மெஷின்களை தனது சொந்த செலவில் வழங்கிக்கொண்டிருந்தார். அவருக்கு கை வலித்ததோ தெரியவில்லை திடீரென்று ஒரு ஏழைத் தாய்க்கு என்னைவிட்டு வழங்குமாறு பணித்தார்.
அந்த தாயின் புன்னகையில் நானும் சற்று புன்னகையோடு புகைப்படத்தில் இடம் பிடித்துவிட்டேன்.
வழங்குவதற்க்கு தகுதியில்லையென்றாலும் அந்த தாயின் வாழ்க்கை எதிர்காலம் புன்னகையோடு தொடர வாழ்த்திவிட்டு வழங்கினேன்.
இந்த செய்தி தினகரன் நாளிதழில் வெளிவந்தபோது அதை கத்தரித்து இணைத்திருக்கிறேன். தையல் மெஷின் செலவுகளுக்குச் சொந்தக்காரரான திரு வே. தேவராஜ் கம்பீரமாக எனது அருகில். அவரை தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளவும் புகைப்படத்தில் அவரது சட்டையில் க எழுத்து பதிவாகியுள்ளது.
அவரைப்பற்றி சொல்லப்போனால் நிறைய உதவிகள் செய்வதில் தாராள மனம் கொண்டவர். சமீபத்தில் ஒரு தந்தையில்லாத ஏழைப்பெண் திருமணம் என்று வந்துநின்றபோது ருபாய் ஐந்து ஆயிரம் தந்து உதவி செய்தவர். அவரது கருணை மேலும் மேலும் தொடர வாழ்துகிறேன்.
No comments:
Post a Comment