Thursday, September 9, 2010

எழுத்தாளனுக்கு செல்லும் இடமெங்கும் சிறப்பு



அகமதாபாத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அகமதாபாத் தமிழ்ச்சங்க ஆண்டுவிழாவுக்குச் சென்றிருந்தேன். பரிச்சமில்லாத என் முகம் பார்த்தபிறகும் என்னை அன்போடு வரவேற்று என்னைப்பற்றி விசாரிக்க நான் ஒரு எழுத்தாளர் என்று சொல்லிவிட்டு எனது இடைவெளிகள் நூலினை அவருக்குத்தந்தேன்.

என் கரம் பற்றி விழா மேடையின் முன்வரிசையில் அமர்த்தி தமிழ்சங்கத்தினுடைய தலைவர்
மற்றும் செயலாளருக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார்கள்.

விழா தொடங்கியது நிறைய பேச்சாளர்கள் பேசி முடித்தார்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர் திடீரென்று நமது அகமதாபாத தமிழ்சங்கத்திற்கு குமரிமாவட்டஎழுத்தாளர் ஐரேனிபுரம் பால்ராசய்யா வந்துள்ளார் அவரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறோம் என்று என்னை மேடைக்கு அழைத்தார்கள்.

மேடைக்குச் சென்றபோது தமிழ்ச்சங்கத்தலைவர் திரு சாம்சிவன் எனக்கு பூச்செண்டு தந்து என்னை வரவேற்றார்.என்னால் மறக்க முடியாத நிகழ்வு அது.

1 comment:

Anonymous said...

நீங்க எழுத்தாளரா? சொல்லவேயில்ல.